Search This Blog

Sunday, July 19, 2009

ஆத்திகத்தினுள் ஓர் நாத்திகம்

கோயிலாவதேதடா குளங்களாவதேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே

பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதைகாள்
பூசையுள்ள தன்னிலே பூசை கொண்ட தெவ்விடம்
ஆதி பூசை கொண்டதோ அனாதி பூசை கொண்டதோ
ஏது பூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே

இருக்க நாலு வேதமும் எழுத்தை அறவோதினும்
பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லீரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்து கூடல் ஆகுமே

வாயிலே சுரக்கு நீரை எச்சில் என்று சொல்கிறீர்
வாயிலே குதப்புவேதம் எனப்படக் கடவதோ

தில்லைநாயகன் அவன் திருவரங்கனும் அவன்
எல்லையான புவனமும் ஏகமுத்தியானவன்
பல்லும்நாவும் உள்ளபேர் பகுத்துக் கூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே

சாவதான தத்துவச் சடங்கு செய்யும் ஊமைகாள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என்செய்வேன்

அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்
அஞ்செழுத்தும் நெஞ்செழுத்து அவ்வெழுத்து அறிந்தபின்
அஞ்செழுத்தும் அவ்வின்வண்ணம் ஆனதே சிவாயமே

(சிவவாக்கிய சித்தர்)

No comments:

Post a Comment