கோயிலாவதேதடா குளங்களாவதேதடாகோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே
பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதைகாள்
பூசையுள்ள தன்னிலே பூசை கொண்ட தெவ்விடம்
ஆதி பூசை கொண்டதோ அனாதி பூசை கொண்டதோ
ஏது பூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே
இருக்க நாலு வேதமும் எழுத்தை அறவோதினும்
பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லீரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்து கூடல் ஆகுமே
வாயிலே சுரக்கு நீரை எச்சில் என்று சொல்கிறீர்
வாயிலே குதப்புவேதம் எனப்படக் கடவதோ
தில்லைநாயகன் அவன் திருவரங்கனும் அவன்
எல்லையான புவனமும் ஏகமுத்தியானவன்
பல்லும்நாவும் உள்ளபேர் பகுத்துக் கூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே
சாவதான தத்துவச் சடங்கு செய்யும் ஊமைகாள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என்செய்வேன்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்
அஞ்செழுத்தும் நெஞ்செழுத்து அவ்வெழுத்து அறிந்தபின்
அஞ்செழுத்தும் அவ்வின்வண்ணம் ஆனதே சிவாயமே
(சிவவாக்கிய சித்தர்)

No comments:
Post a Comment